ராஜஸ்தான் மாநில மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றியவர் ஓம் பிர்லா: பிரதமர் மோடி புகழாரம்
ராஜஸ்தான் மாநில மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றியவர் ஓம் பிர்லா என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
புதுடெல்லி,
மக்களவை சபாநாயகராக பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்த கோடா தொகுதி எம்.பி.யான ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஓம் பிர்லாவை பிரதமர் மோடி முன்மொழிந்தார், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் வழிமொழிந்தனர். ஓம் பிர்லாவை, அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரும் வழிமொழிந்தார்.
சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார். மோடி பேசும் போது, “ ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே பாலமாக சபாநாயகர் ஓம் பிர்லா இருப்பார். ராஜஸ்தான் மாநில மக்களுக்காக ஓய்வின்றி பணியாற்றியவர் ஓம் பிர்லா. கோடா தொகுதியில் ஒருவர் கூட பசியுடன் உறங்க செல்லக்கூடாது, மக்களை மையமாக வைத்தும் அவருடைய அரசியல் செயல்பாடு இருந்தது . குஜராத் நிலநடுக்கத்தின் போது, ஓம் பிர்லா பாதிக்கப்பட்ட பகுதியில் தங்கி, கடுமையாக பணியாற்றியதை மறக்க முடியாது” என்றார்.
Related Tags :
Next Story