காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்


காஷ்மீர் விவகாரம்: திமுக தலைமையில் டெல்லியில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2019 7:59 AM GMT (Updated: 22 Aug 2019 7:59 AM GMT)

ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி திமுக தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி,

ஜம்மு-காஷ்மீரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி  திமுக தலைமையில் டெல்லி ஜந்தர்மந்தரில் அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ (எம்) தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத், டி.ராஜா, சமாஜ்வாதி கட்சி  தலைவர் ராம்கோபால் யாதவ், காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, திருநாவுக்கரசர், குலாம்நபி ஆசாத், முகுல் வாஷ்னிக், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் மனோஜ் ஜா மற்றும் திமுக எம்.பி.க்கள் உள்பட பல்வேறு கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

ஜம்மு-காஷ்மீரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பி.க்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Next Story