வங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது


வங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2019 10:22 AM GMT (Updated: 27 Aug 2019 10:22 AM GMT)

வங்காளதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா - வங்காளதேசம் எல்லையில் இந்தியாவிற்குள் நுழைய முயற்சி செய்த வங்காளதேச நாட்டவர்களை இந்திய எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. கோனா பக்தியில் 26 பேரை எல்லைப் பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோதமாக ஊடுருபவர்கள் கைது செய்யப்படுவதும், கால்நடைகளை கடத்துபவர்கள் கைது செய்யப்படுவதுவும் வழக்கமாக இருந்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை அடுத்து இந்தியாவில் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்நிலையில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Next Story