“பெரியார் புகழ் ஓங்குக” பெரியார் பிறந்த நாளில் தமிழில் டுவிட் செய்த பினராயி விஜயன்
பெரியார் பிறந்தநாளையொட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
தந்தை பெரியாரின் 141வது பிறந்த நாள் விழா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில், பெரியார் பிறந்தநாளையொட்டி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, டுவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ள அவர், பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்வதாகவும், பெரியார் புகழ் ஓங்குக என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிற்போக்குத்தனம், அநீதி, ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் அனைவருக்கும் பெரியார் தொடர்ந்து உந்து சக்தியாகத் திகழ்கிறார்!
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) September 17, 2019
பெரியார் புகழ் ஓங்குக! pic.twitter.com/NipR3IvZMH
Related Tags :
Next Story