மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு


மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை பாதிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 10:30 AM GMT (Updated: 2 Oct 2019 10:30 AM GMT)

மும்பையில் ரெயில் பெட்டி தடம் புரண்டதால் புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் சிஎஸ்எம்டி - பந்த்ரா  இடையே ஓடும்  புறநகர் ரெயில் இன்று காலை 11.30 மணியளவில் கிங்ஸ் சர்கிள் ரெயில் நிலையத்திற்கும் மஹிம் ரெயில் நிலையத்திற்கும் இடையே தடம் புரண்டது. ரெயிலின் முன்பக்க பெட்டி தடம் புரண்டது.

இந்த விபத்தில்  யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. எனினும்,  புறநகர் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.  இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Next Story