டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை


டெல்லியில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லை
x
தினத்தந்தி 2 Oct 2019 7:32 PM GMT (Updated: 2 Oct 2019 7:32 PM GMT)

டெல்லியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்க ஆளில்லாமல் இருந்தது.

புதுடெல்லி,

காந்தி ஜெயந்தி நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. காந்தி பிறந்த நாளில், ‘கருப்பு காந்தி’ என்று அழைக்கப்படும் காமராஜர் இறந்தார். காந்தி பிறந்தநாளுக்கு மரியாதை செலுத்தும்போது காமராஜரின் நினைவு நாளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டு வருகிறது.

டெல்லியில் காமராஜரின் முழு உருவச்சிலை, நாடாளுமன்றம் அருகே உள்ளது. இந்த சிலையை ஒட்டியுள்ள சாலைக்கு கே.காமராஜ் மார்க் என்றே பெயரிடப்பட்டு உள்ளது. காங்கிரஸ் உள்பட அனைத்துக்கட்சி தலைவர்களும் அடிக்கடி வந்து செல்லும் சாலையில் தான் நினைவு நாளில் காமராஜர் சிலைக்கு ஒருவர் கூட மாலை அணிவிக்கவில்லை.


Next Story