ராம்பூர் பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு தூக்கு தண்டனை - உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு


ராம்பூர் பயங்கரவாத தாக்குதல்: 4 பேருக்கு தூக்கு தண்டனை - உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 3 Nov 2019 8:30 PM GMT (Updated: 3 Nov 2019 8:02 PM GMT)

ராம்பூர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரபிரதேச கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

ராம்பூர்,

உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) முகாம் மீது கடந்த 2008-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், பீகாரை சேர்ந்த சபாவுதீன், ராம்பூரை சேர்ந்த முகம்மது ஷெரீப், மொரதாபாத்தை சேர்ந்த ஜாங் பகதூர், மும்பையை சேர்ந்த பகிம் அன்சாரி ஆகிய 6 பேர் கைது செய்யப் பட்டனர். இந்த வழக்கு விசாரணை ராம்பூர் கோர்ட்டில் நடந்து வந்தது. 6 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி உறுதி செய்தார்.

இதனையடுத்து இம்ரான் ஷாசத், முகம்மது பாரூக், சபாவுதீன், முகம்மது ஷெரீப் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சஞ்சய் குமார் தீர்ப்பு வழங்கினார். மேலும் ஜாங் பகதூருக்கு ஆயுள் தண்டனையும், பகிம் அன்சாரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டது.

Next Story