மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளதாக தகவல்
மராட்டிய முதல்-மந்திரியாக சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை,
பாரதீய ஜனதா, சிவசேனா இடையேயான முதல்-மந்திரி பதவி போட்டியால் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
இந்நிலையில் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் சரத் பவார் கூறியதாவது:-
சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரேவை முதல்-மந்திரியாக ஏற்க கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை நாளை சந்திக்க உள்ளோம்.
மராட்டிய விகாஸ் அகாதி என்ற பெயரில் 3 கட்சிகளும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். மேலும் அமைச்சரவையில் யார்,யார் இடம் பெறுவது என்பது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும். கவர்னரை எப்போது சந்திப்பது என்பது குறித்தும் நாளை முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல்-மந்திரியாக பதவி ஏற்க உள்ள உத்தவ் தாக்கரே, தற்போது எம்.எல்.ஏ-வாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story