ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் சேர்ந்தது ஏன்? - அஜித்பவார் பதில்


ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் சேர்ந்தது ஏன்? - அஜித்பவார் பதில்
x
தினத்தந்தி 23 Nov 2019 7:17 PM GMT (Updated: 23 Nov 2019 7:17 PM GMT)

ஆட்சி அமைக்க பா.ஜனதாவுடன் சேர்ந்தது ஏன் என்பது குறித்து அஜித்பவார் பதில் அளித்துள்ளார்.

மும்பை,

மராட்டிய துணை முதல்-மந்திரியாக நேற்று பதவி ஏற்றுக் கொண்ட தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், ஆட்சி அமைக்க பாரதீய ஜனதாவுடன் சேர்ந்தது ஏன்? கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கையில், தேர்தல் முடிவு அக்டோபர் 24-ந் தேதி வெளியானதில் இருந்து எந்த கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியவில்லை என்றும், மராட்டியத்தில் விவசாயிகள் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளதால் நிலையான ஆட்சி அமைப்பதற்காக பாரதீய ஜனதாவுடன் சேர்ந்ததாக கூறினார்.

Next Story