நாட்டையே உலுக்கிய தெலுங்கானா பெண் கொலை வழக்கு : சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணை


நாட்டையே உலுக்கிய தெலுங்கானா பெண் கொலை வழக்கு : சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணை
x

தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஐதராபாத்,

தெலுங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே 26 வயது பெண் மருத்துவரான ப்ரியங்கா ரெட்டியை, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்த கொடூர கொலையில் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. இந்த நிலையில்,  மேற்கூறிய வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க மகப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story