நிதி அமைச்சர் திறமையற்றவர் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
நிதி அமைச்சர் திறமையற்றவர் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
திருவனந்தபுரம்,
கேரளாவின் முக்கம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்தார். ராகுல் காந்தி கூறியதாவது:-
நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதி அமைச்சருக்கு தெரியாது. அடிப்படையிலேயே அவர் திறமையற்றவர். வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டால், வெங்காயம் பூண்டு சாப்பிடுவதில்லை என்கிறார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நாட்டின் நிதி பொறுப்பை திறமைசாலிகள் கையாண்டனர்” என்றார்.
Related Tags :
Next Story