பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது - ராகுல்காந்தி
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
பாகிஸ்தானில் சீக்கிய குருத்வாரா மீது நடத்தப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது. மதவெறி என்பது ஆபத்தானது, அதற்கு எல்லைகள் இல்லை. அன்பு, பரஸ்பர மரியாதை ஆகியவற்றை புரிந்து கொள்வது தான் ஒரே மாற்று மருந்தாகும்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
The attack on Nankana Sahab is reprehensible & must be condemned unequivocally .
— Rahul Gandhi (@RahulGandhi) 4 January 2020
Bigotry is a dangerous, age old poison that knows no borders.
Love + Mutual Respect + Understanding is its only known antidote.
Related Tags :
Next Story