இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு
ஜி சாட் - 30 செயற்கைக்கோளை வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
தகவல் தொடர்பு சேவைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவின் ஜிசாட்-30 செயற்கைக்கோள், பிரெஞ்சு கயானாவில் உள்ள கவ்ரவ் ஏவுதளத்தில் இருந்து திட்டமிட்டப்படி ஏரியான்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில், ஜி சாட் - 30 செயற்கைக்கோளை வெற்றிக்கரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
2020-ம் ஆண்டின் முதல் செயற்கோளை விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள். டிடிஎச் சேவை, ஏடிஎம் இணைப்பு, மின் ஆளுமை போன்றவற்றை வழங்க ஜிசாட்-30 உதவும். இஸ்ரோ மேலும் பல திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ளவேண்டும் என பதிவிட்டுள்ளார்.
Congratulations to our @isro team for the first satellite launch of 2020. GSAT-30, with its unique configuration will provide DTH Television services, connectivity to ATMs, stock exchanges and e-Governance. Wish many more successful missions to ISRO in the year: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 17, 2020
Related Tags :
Next Story