டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்


டெல்லியில் 6 மாடி கட்டிடம் சாய்ந்தது - குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினர்
x
தினத்தந்தி 21 Feb 2020 4:22 AM GMT (Updated: 21 Feb 2020 4:22 AM GMT)

டெல்லியில் 6 மாடி கட்டிடம் லேசாக சாய்ந்தது இதனால் குடியிருப்புவாசிகள் அலறியடித்து வெளியேறினார்கள்.

புதுடெல்லி, 

தெற்கு டெல்லியின் முனிர்கா பகுதியில் ஒரு 6 மாடி கட்டிடம் உள்ளது. இதில் உள்ள 45 குடியிருப்புகளில் சுமார் 100 பேர் வசித்து வருகிறார்கள். இந்த கட்டிடம் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வடக்கு வாசல் முன்புறம் அமைந்துள்ளது. 

நேற்று காலை 5.30 மணி அளவில் அந்த கட்டிடம் லேசாக சாய்ந்தது. இதனை அந்த வழியாக சென்ற போலீஸ்காரர் பார்த்துவிட்டு எச்சரித்தார். இதனால் அந்த கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் இடையே பீதி ஏற்பட்டது. அங்கு குடியிருந்த அனைவரும் அலறியடித்து அந்த கட்டிடத்தைவிட்டு வெளியேறினார்கள். 

மாநகராட்சி அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்பு படையினர், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

Next Story