டெல்லி நிஜாமுதீன் கூட்டம்: தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல நோயை கட்டுப்படுத்துவதே அவசியம்-சுகாதாரத்துறை


டெல்லி  நிஜாமுதீன் கூட்டம்: தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல நோயை கட்டுப்படுத்துவதே அவசியம்-சுகாதாரத்துறை
x
தினத்தந்தி 31 March 2020 1:20 PM GMT (Updated: 31 March 2020 1:20 PM GMT)

டெல்லி நிஜாமுதீன் கூட்டம் தவறுகளைக் கண்டறியும் நேரம் அல்ல, கொரோனா கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

கொடிய வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 37,000 ஐ தாண்டி உள்ளது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை1,284 ஐ தாண்டியது.

இந்தியாவில் உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் 1251 ஆகவும், இறப்புகளின் எண்ணிக்கை 32 ஆகவும் இருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது. 

223 பாதிப்புகளுடன், மராட்டியம் நாட்டில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமாகவும்,அடுத்து கேரளா 221 பாதிப்புகளுடனும் உள்ளது.

தெற்கு டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிகி ஜமாத்தின் தலைமையகமான அலமி மார்க்காஸ் 

பங்களேவாலி மஸ்ஜித்தில் இந்த மாத தொடக்கத்தில் நடந்த கூட்டத்தில் நாடு முழுவதும் இருந்து சுமார் 8,000 பேர் கலந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலேசியா, இந்தோனேசியா, சவுதி அரேபியா மற்றும் கிர்கிஸ்தான் உள்ளிட்ட 2,000 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள்  கூட்டத்தில்  கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைக் கூட்டி மாநாடு நடத்திய நிஜாமுதீன் மர்காஸ் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்கு பதிவு செய்ய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மாநாட்டில் பங்கேற்றுச் சென்றவர்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் கொரோனா அறிகுறிகுளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது குறித்து சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் கூறியதாவ்த்ய:-

நிஜாமுதீன் பகுதியைப் பொறுத்தவரை, தவறு கண்டுபிடிப்பதற்கான நேரம் இதுவல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொண்டு பாராட்ட வேண்டும். எங்களுக்கு முக்கியமான விஷயம் என்னவென்றால், எந்தவொரு பாதிப்பையும் நாங்கள் கண்டறிந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் செயல்முறையின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

Next Story