ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி


ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும்- பிரதமர் மோடி
x
தினத்தந்தி 7 April 2020 3:50 AM GMT (Updated: 7 April 2020 3:50 AM GMT)

ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி, 

உலக சுகாதார தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-  ஆண்டு முழுவதும் தனிப்பட்ட உடல் நலனில் கவனம் செலுத்தினால் நமது ஆரோக்கியம் மேம்படும். நமக்காக, பிறரின் நலனுக்காக தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும்

ஒருவருக்கொருவர் நல்ல ஆரோக்கியத்துக்காகவும், நல்வாழ்விற்காகவும் பிரார்த்தனை செய்வதோடு மட்டுமல்லாமல்,  கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிரான போரில் தைரியமாக முன்னிலை வகிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நமது  நன்றியை மீண்டும் உறுதிப்படுத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story