இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது


இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியது
x
தினத்தந்தி 8 April 2020 4:39 AM GMT (Updated: 8 April 2020 4:39 AM GMT)

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி, 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி,  இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.   

கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.  கொரோனா பாதிப்பில் இருந்து 402 -பேர் மீண்டுள்ளனர்.

மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.  தமிழகத்தில்  690 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. டெல்லியில் 576 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. 

Next Story