மும்பை தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு


மும்பை தாஜ் ஓட்டல் ஊழியர்கள் 6 பேருக்கு  கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 12 April 2020 3:46 AM GMT (Updated: 12 April 2020 3:46 AM GMT)

மும்பை தாஜ் ஓட்டலின் ஊழியர்களில் 6 பேருக்கு கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன.

மும்பை: 

மும்பை தாஜ் ஓட்டலின்  ஊழியர்களில் 6 பேருக்கு  கொரோனா வைரஸின் அறிகுறிகள் காணப்பட்டன. அதன் பிறகு இந்த 6 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அனைவரும் மும்பை மரைன் லைன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மும்பையில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்புகள் உள்ளன. மும்பையில் மட்டும், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1146 ஆகும், இவர்களுக்கு  பல்வேறு அரசு மருத்துவமனைகளில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில், தாஜ் ஓட்டலில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்  தங்கலாம் என்று அனுமதி வழங்கப்பட்டது. அதன் பிறகு பல மருத்துவர்கள் இந்த ஓட்டலுக்கு வந்து தங்கினர். இத்தகைய சூழ்நிலையில், ஓட்டலின் 6 ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story