டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும்-மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரை
டெல்லி தனியார் ஆஸ்பத்திரிகள்கொரோனா சிகிச்சைக்கு ரூ.10 ஆயிரம் வசூலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக்குழு பரிந்துரைத்துள்ளது.
புதுடெல்லி, -
டெல்லியில் தனியார் ஆஸ்பத்திரிகள் கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டணம் குறித்து வரையறுக்க உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நியமித்தார். நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தலைமையிலான இந்த குழு கொரோனா சிகிச்சைக்கு வசூலிக்க வேண்டிய கட்டண விகிதங்களை நேற்று அரசிடம் அளித்து உள்ளது.
அதன்படி தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சை பெறுவோரிடம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வசூலிக்கலாம். அவசர சிகிச்சை பிரிவுக்கு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 வரையும், வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சைக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரையும் வசூலிக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. டெல்லியில் தற்போது தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் சிகிச்சைக்கு ரூ.24 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.
இதைப்போல அவசர சிகிச்சைப்பிரிவு மற்றும் வெண்டிலேட்டர் சிகிச்சைக்கு முறையே ரூ.34 ஆயிரம் முதல் ரூ.43 ஆயிரம் வரையும், ரூ.44 ஆயிரம் முதல் ரூ.54 ஆயிரம் வரையும் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story