கொரோனா பாதிப்பின் புதிய உச்சம்: கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1267 பேருக்கு தொற்று உறுதி
கர்நாடகத்தில் இன்று ஒரேநாளில் 1267 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 1267 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 13,190 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 220 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்னிக்கை 7,507 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,472 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
Related Tags :
Next Story