இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுப்பு காலியாக சென்ற விமானம்


இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுப்பு காலியாக சென்ற விமானம்
x
தினத்தந்தி 30 Jun 2020 6:49 AM GMT (Updated: 30 Jun 2020 6:49 AM GMT)

இந்தியர்களுக்கு சீனாவுக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதால் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் காலியாக சென்ற விமானம்.

புதுடெல்லி

இந்தியாவில் இருந்து கடந்த 21-ம் தேதி சீனா சென்ற சிறப்பு விமானத்தில் 2 இந்தியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், தற்போது இந்தியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாடு மறுப்பு தெரிவித்துள்ளது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சோ நகருக்கு பயணிகள் இன்றி காலியாக சென்றது. இதில் பயணிக்க இருந்த இந்திய தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உள்பட ஏராளமானோரின் பயணம் தடைபட்டது.

Next Story