புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 166 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
புதுச்சேரி மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 166 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி,
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 166 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 3,171 ஆக உயர்ந்து உள்ளது.
இன்று தொற்று உறுதி செய்யப்பட்டதில் புதுச்சேரியில் 154 பேரும், காரைக்காலில் 12 பேரும் ஆவர்.
மாநிலத்தில் நோய்தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,869 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 1,112 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது வரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநில மக்கள் சமூக இடைவேளி மற்றும் முககவசம் அணிந்து செல்லுமாறு அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளது.
Related Tags :
Next Story