முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஆட்சியில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் பிரணாப் முகர்ஜி. அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதுபற்றி அவர் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், மருத்துவமனைக்கு வேறு ஒரு விசயத்திற்காக சென்றபொழுது, எனக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. அதில் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
என்னுடன் கடந்த வாரம் தொடர்பில் இருந்தவர்கள், தயவுகூர்ந்து சுய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். கொரோனா பரிசோதனையையும் செய்து கொள்ளும்படி நான் கேட்டு கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story