புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி


புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
x
தினத்தந்தி 12 Aug 2020 4:47 PM GMT (Updated: 12 Aug 2020 4:47 PM GMT)

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி, 

புதுச்சேரியில் கொரோனா தொற்று தற்போது வேகமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக, மருத்துவமனைகளில் உள்ள அனைத்துப் படுக்கைகளும் நிரம்பிவிட்டன. இதனால் 41.78 சதவீத கொரோனா நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதனிடையே மாநிலத்தில் இன்று அதிக அளவாக 481 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆகவும், உயிரிழப்பு 96 ஆகவும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 2,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இந்நிலையில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார். மேலும் நாளை மறுநாள் முதல் இரவு 7 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story