தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி


தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி
x
தினத்தந்தி 14 Aug 2020 2:23 PM GMT (Updated: 14 Aug 2020 2:23 PM GMT)

தாராவியில் இன்று புதிதாக 9 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

தாராவியில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு தினமும் ஒற்றை இலக்கில் மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.

நேற்று வரை தாராவியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,649 ஆக இருந்தது.

இந்நிலையில் இன்று தாராவியில் புதிதாக 9 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 658 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 2 ஆயிரத்து 312 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 87 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story