4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்


4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழப்பு - ராகுல்காந்தி டுவீட்
x
தினத்தந்தி 19 Aug 2020 7:57 AM GMT (Updated: 19 Aug 2020 7:57 AM GMT)

4 மாதங்களில் 2 கோடி பேர் வேலையிழந்துள்ளதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு அறிக்கையில், 'லாக்-டவுன் காரணமாக ஏப்ரல்-ஜூலையில் சம்பள ஊழியர்கள் ஒரு கோடியே 89 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் ஒரு கோடியே 77 லட்சம் பேருக்கும் கூடுதலாக மே மாதத்தில் 1 லட்சம் பேருக்கும் ஜூன் மாதத்தில் 39 லட்சம் பேருக்கும் ஜூலையில் 50 லட்சம் பேருக்கும் பணியிழப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 12 கோடியே 15 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டதில், சிறு வணிகர்கள், தினக்கூலிகள், தெருவில் கூவி விற்பவர்களில் 9 கோடி பேருக்கு வேலையிழப்பு ஏற்பட்டது எனத் தெரிவித்திருந்தது.

இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்ட ஆய்வறிக்கை குறித்து நாளேடுகளில் வந்த செய்தியை தனது ட்விட்டர் பதிவில் இணைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கக் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் நாடுமுழுவதும் கடந்த 4 மாதங்களில் ஏறக்குறைய 2 கோடி பேர் வேலையிழந்துள்ளனர்.

2 கோடி குடும்பங்களின் எதிர்காலம் இருளில் மூழ்கி உள்ளது. வேலையின்மை, பொருளாதார சீரழிவின் உண்மையை இந்திய மக்களிடம் இருந்து மறைக்க முடியாது.  பேஸ்புக்கில் போலி செய்திகளையும், வெறுப்புகளையம் பரப்புவதன் மூலம், உண்மையை மக்களிடம் இருந்து மறைக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.

Next Story