ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 18 Sep 2020 6:14 AM GMT (Updated: 18 Sep 2020 6:14 AM GMT)

ராஜஸ்தானில் இன்று மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் ராஜஸ்தானில் இன்று காலை 10.30 மணி நிலவரப்படி மேலும் 810 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,10,283 ஆக அதிகரித்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,301 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரேநாளில் ராஜஸ்தானில் கொரோனா தொற்றுக்கு 15 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  89,063 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 18,282 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். 


Next Story