கேரளாவில் புதிதாக 7,631 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கேரளாவில் புதிதாக கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் இன்று மேலும் 7,631 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 6,685 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது. இவர்களில் 723 பேருக்கு நோய் எப்படி பரவியது என்பது குறித்து தெரியவில்லை.
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று 8,410 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 399 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 22 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் பலியானோர் மொத்த எண்ணிக்கை 1,161 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுடன் 95,200 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story