குஜராத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கிய கும்பல் கைது


குஜராத்தில் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரித்து வழங்கிய கும்பல் கைது
x
தினத்தந்தி 28 Nov 2020 1:47 AM GMT (Updated: 28 Nov 2020 1:47 AM GMT)

குஜராத்தில் கடந்த 7 ஆண்டுகளாக போலி மதிப்பெண் சான்றிதழ்களை தயாரித்து வழங்கிய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

வதோதரா,

குஜராத்தின் வதோதரா பகுதியில் பல்வேறு பல்கலை கழகங்களின் போலியான மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பட்டங்கள் ஆகியவற்றை கும்பல் ஒன்று தயாரித்து வழங்கி வந்துள்ளது.  இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கடந்த 7 ஆண்டுகளாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.  அந்த கும்பலிடம் இருந்து, போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க உதவிய 3 கணினிகள் மற்றும் மின்னணு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.  போலியான சான்றிதழ்களையும் கைப்பற்றி உள்ளனர்.

இதனை தொடர்ந்து, அந்த பல்கலை கழகங்களில் பணிபுரிபவர்கள் யாரேனும் இந்த கும்பலுடன் தொடர்பில் உள்ளனரா என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த இருக்கின்றனர்.

Next Story