இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.51 லட்சம் ஆக உயர்வு


இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93.51 லட்சம் ஆக உயர்வு
x
தினத்தந்தி 28 Nov 2020 4:23 AM GMT (Updated: 28 Nov 2020 4:23 AM GMT)

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

உலக நாடுகளில் தீவிர அச்சுறுத்தலாக உள்ள கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் நாட்டில் 41 ஆயிரத்து 322 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்து 51 ஆயிரத்து 110 ஆக உயர்வடைந்து உள்ளது.  இதேபோன்று கடந்த 24 மணிநேரத்தில் 485 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர்.  நேற்று இந்த எண்ணிக்கை 492 ஆக இருந்தது.

இதனால் இந்தியாவில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 35 ஆயிரத்து 715ல் இருந்து 1 லட்சத்து 36 ஆயிரத்து 200 ஆக உயர்ந்து உள்ளது.  இதேபோன்று, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 55 ஆயிரத்து 555 என்ற நேற்றைய எண்ணிக்கையில் இருந்து 4 லட்சத்து 54 ஆயிரத்து 940 ஆக இன்று குறைந்து உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 41 ஆயிரத்து 452 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றுள்ளனர்.  இதனால், சிகிச்சை பெற்று குணமடைந்து சென்றவர்களின் எண்ணிக்கை நாடு முழுவதும் இதுவரை 87 லட்சத்து 59 ஆயிரத்து 969 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story