டெல்லியில் புதிதாக 1,091- பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
டெல்லியில் புதிதாக 1,091- பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியில் புதிதாக 1,091 -பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,275 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 26 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லியில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 17 ஆயிரத்து 005 ஆக அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5 லட்சத்து 96 ஆயிரத்து 580 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். தொற்று பாதிப்புக்கு 10 ஆயிரத்து 277 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்புடன் 10,148 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story