பஞ்சாபில் பா.ஜனதாவினர் மீது விவசாயிகள் தாக்குதல் போலீஸ் தடியடி
பஞ்சாபில் பா.ஜனதாவினர் மீது தாக்குதல் நடத்திய விவசாயிகள் மீது போலீஸ் தடியடி நடத்தினர்
அமிர்தசரஸ்:
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள அம்ரித் சிங் சாலையில் பா.ஜனதா சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது.
அப்போது அங்கு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூட்டமாக வந்தனர். திடீரென அவர்கள் வாஜ்பாய் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றிருந்த பா.ஜனதாவினர் மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த நாற்காலிகள் மற்றும் ஒலிபெருக்கிகளையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தினார்கள். தகவல் அறிந்து வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரகளையில் ஈடுபட்டவர்கள் மீது லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். விவசாயிகளின் இந்த தாக்குதலில் பா.ஜனதாவினர் 5 பேர் காயம் அடைந்தனர். பா.ஜனதாவினர் மீதான விவசாயிகள் தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story