அரியானாவில் 3 நாட்களில் நடந்த 2 ஆணவ கொலைகள்
அரியானாவில் 3 நாட்களில் ஆணவ கொலைக்கு 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
சண்டிகர்,
அரியானாவின் பானிபட் நகரில் வசித்து வந்தவர் நீரஜ் (வயது 23). இவர் வேறு சாதியை சேர்ந்த பெண்ணை காதலித்து உள்ளார். இந்த ஜோடி கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த நவம்பரில் திருமணம் செய்து கொண்டது.
இதனால் பெண்ணின் சகோதரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். அதன்பின்னர் தொடர்ச்சியாக நீரஜுக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. இந்நிலையில், கடந்த வெள்ளி கிழமை இரவில் அந்த வாலிபரை பெண்ணின் சகோதரர்கள் நகரின் சந்தை பகுதியில் சூழ்ந்து கொண்டு ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த கத்துக்குத்து காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீரஜ் வழியிலேயே உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கடந்த புதன்கிழமை ரோஹ்தக் பகுதியில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த ஜோடி ஒன்று மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டது. அரியானாவில் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து 2 ஆணவ கொலைகள் நடந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story