இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை: சுகாதாரத்துறை அமைச்சகம்
இந்தியாவில் கடந்த 2 நாட்களாக புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய கொரோனா தொற்று இந்தியாவிலும் தொடர்ந்து பலரிடம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து நாடு திரும்பியவர்களிடம் நடத்தப்படும் பரிசோதனைகளில் இது உறுதியாகிறது. இந்தியாவில் இதுவரை 116- பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றும் இன்றும் புதிதாக உருமாறிய கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 116- ஆகவே நீடிக்கிறது.
Related Tags :
Next Story