கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
கேரளாவில் இன்று மேலும் 6,186- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளத்தில் இன்று புதிதாக 6,186 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: -கேரளாவில் இன்று புதிதாக 6,186 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 8,57,381ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த பலியின் எண்ணிக்கை 3,506 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 4,296 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 783,393 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் தற்போது 70,259 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story