நாட்டில் இதுவரை 6.31 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது : மத்திய சுகாதாரத்துறை
நாட்டில் இதுவரை 6.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கடந்த 4 நாள்களில் 6.31 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது. இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில்,
நாட்டில் இதுவரை மொத்தம் 6,31,417 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஏழு மாதங்களுக்கு பிறகு கொரோனாவால் சிகிச்சைப் பெற்று வருவோரின் எண்ணிக்கை 2 லட்சமாக குறைந்துள்ளது. 8 மாதங்களுக்கு பிறகு பலியானோரின் எண்ணிக்கை 140ஆக குறைந்துள்ளது.
மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு 50 ஆயிரத்திற்கு அதிகமாக நோயாளிகள் கேரளா மற்றும் மராட்டியத்தில் மட்டுமே சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story