மராட்டியத்தில் குடோன் இடிந்ததில் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
மராட்டியத்தில் குடோன் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது.
புனே,
மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் பிவண்டி நகரில் மன்கோலி பகுதியில் குடோன் ஒன்று இருந்தது. இந்நிலையில், அந்த குடோன் திடீரென நேற்று காலை 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது.
அதற்குள் 7 பேர் சிக்கி கொண்டனர் என முதற்கட்ட தகவல் வெளியானது. இதுபற்றிய தகவல் தீயணைப்பு படையினர், காவல் துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மேலாண் படையினருக்கு தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், குடோன் இடிந்த சம்பவத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்து உள்ளார். 5 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிப்பட்டது. பின்னர் மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்தன.
இந்த நிலையில், குடோன் இடிந்ததில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. 6 பேர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story