அரியானாவில் 3 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் வரும் 24 ஆம் தேதி முதல் திறப்பு


கோப்பு படம் (பிடிஐ)
x
கோப்பு படம் (பிடிஐ)
தினத்தந்தி 22 Feb 2021 12:55 PM GMT (Updated: 22 Feb 2021 12:55 PM GMT)

அரியானாவில் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் கேரளா, மராட்டியம், பஞ்சாப் உள்ளிட்ட சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு கடந்த சில வாரங்களாக உயர்ந்து வருகிறது.  நாட்டில் தினசரி பதிவாகும் கொரோனா பாதிப்புகளில் 74 சதவீதம் மேற்கூறிய மாநிலங்களில் ஏற்படுவபவைதான். எனினும் பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே காணப்படுகிறது. 

இந்த நிலையில், அரியானாவில் வரும் 24 ஆம் தேதி முதல் 3 ஆம் வகுப்பு முதல் 5 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்குப் பிறகு துவக்க பள்ளி மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.  காலை 10 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story