அரியானாவில் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம்


அரியானாவில் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் நாளை முதல் தொடக்கம்
x
தினத்தந்தி 22 Feb 2021 7:07 PM GMT (Updated: 22 Feb 2021 7:07 PM GMT)

அரியானாவில் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 24ந்தேதி முதல் தொடங்க உள்ளன.

சண்டிகர்,

அரியானாவில் கொரோனா பாதிப்புகளை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன.  ஊரடங்கு அறிவிக்கப்பட்டு தளர்வுகள் பற்றிய அறிவிப்பும் வெளிவந்தன.

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு பின் 3 முதல் 5 வரையிலான வகுப்புகள் வருகிற 24ந்தேதி முதல் தொடங்க உள்ளன என அரசு அறிவித்து உள்ளது.  இதுபற்றி அரியானா அரசின் செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 1.30 மணி வரை செயல்படும்.

கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கடுமையான முறையில் பின்பற்றி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த முடிவானது அமல்படுத்தப்படும் என தெரிவித்து உள்ளார்.

அரியானாவில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் முன்பே தொடங்கப்பட்டு விட்டன.  இதனையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.  பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் இருந்து ஒப்புதல் கடிதம் ஒன்றை கொண்டு வர வேண்டும்.

இதேபோன்று, தங்களுடைய பிள்ளைகள் ஆன்லைன் படிப்புகளை தொடர வேண்டும் என விரும்பும் பெற்றோர் அதுபற்றி பள்ளிகளுக்கு அவர்கள் கடிதம் எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story