சத்தீஸ்கர்: நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது 3 பேர் பலி
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் கண்ணிவெடி தாக்குதலில் போலீசார் வந்த பஸ் வெடித்து சிதறியது இதில் 3 பேர் பலியானார்கள்
நாராயண்பூர்
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கைக்குப் பின்னர் 20க்கும் மேற்பட்ட போலீசார் ஒரு பஸ்சில் திரும்பிக்கொண்டு இருந்தனர். கண்ணேமேட்டா மற்றும் கன்ஹர்கான் கிராமங்களுக்கு இடையேவந்த போது நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடி வெடி தாக்குதலில் சிக்கி பஸ் வெடித்து சிதறியது. இதில் 3 போலீசார் பலியானார்கள். மற்றும் பலர் காயமடைந்தனர். மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story