கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா தொற்று


கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 30 March 2021 6:15 PM GMT (Updated: 30 March 2021 6:15 PM GMT)

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: - 

கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இன்று  1,946- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 24,650- ஆக உயர்ந்துள்ளது. 

கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 365- ஆக அதிகரித்துள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 58,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் இன்று 16- பேர் உயிரிழந்துள்ளனர்.


Next Story