கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்,
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள சுகாதாரத்துறை இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) 2,389- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவில் இன்று 1,946- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 24,650- ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 லட்சத்து 92 ஆயிரத்து 365- ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 58,557 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பால் இன்று 16- பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story