டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!


டெல்லியில் ஊரடங்கு அமல்: பேருந்து நிலையங்களில் குவிந்த வெளி மாநில தொழிலாளர்கள்..!
x
தினத்தந்தி 19 April 2021 8:01 PM GMT (Updated: 19 April 2021 8:55 PM GMT)

டெல்லியில் வரும் 26- ஆம் தேதி வரை 6 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் செல்கிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், தொற்று பரவல் குறையாமல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க டெல்லி அரசு முடிவு செய்தது. 

இதன்படி, டெல்லியில் இன்று முதல் 6 நாட்களுக்கு  ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.  ஊரடங்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, டெல்லியில் பணியாற்றி வரும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால், டெல்லியின் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் கடும் கூட்டம் காணப்படுகிறது. 

Next Story