திருப்பதி ஏழுமலையான் கோவில் உண்டியல் வருமானம் ரூ.1 கோடியே 67 லட்சம் - அதிகாரிகள் தகவல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 67 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி,
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்தது.
நேற்று முன்தினம் 12 ஆயிரத்து 679 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 7 ஆயிரத்து 350 பக்தர்கள் தங்களின் தலைமுடியை காணிக்கையாகச் செலுத்தினர். நேற்று முன்தினம் ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.1 கோடியே 67 லட்சம் கிடைத்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story