தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்


தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம்
x
தினத்தந்தி 27 April 2021 8:22 AM GMT (Updated: 27 April 2021 8:22 AM GMT)

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக கொரோனா பாதிப்பில் புதிய உச்சம் தொட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அம்மாநிலத்தில் ஒரே நாளில் 10,122- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி 8,126- பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதே ஒருநாள் அதிகபட்ச பாதிப்பாக இருந்தது. தொற்று பாதிப்பை கண்டறிய 99,638- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. 

தெலுங்கானாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 11 ஆயிரத்து 905- ஆக உள்ளது.  அதேபோல், தொற்று பாதிப்பு காரணமாக 52- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 2,094- ஆக உள்ளது. 


Next Story