ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 24,171 பேருக்கு தொற்று உறுதி


ஆந்திராவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 24,171 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 16 May 2021 1:27 PM GMT (Updated: 16 May 2021 1:27 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஐதராபாத்,

ஆந்திர மாநிலத்தில் அரசு மேற்கொண்ட தீவீர கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக மிகக் குறைந்த அளவில் பதிவாகி வருந்தது. ஆனால் தற்போது  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

இந்த நிலையில் இன்று ஆந்திர சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஆந்திராவில் இன்று மேலும் 24,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,35,491 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனா தொற்றால் இன்று 101 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை 9,372 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 2,10,436 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 12,15,683 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story