கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் - ராகுல் காந்தி கேள்வி
கருப்பு பூஞ்சை தொற்றுநோய் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி
கொரோனா வைரஸ் பெருந்தொற்று விவகாரத்தை முறையாக கையாளவில்லை என்றும் திட்டமிடப்படாத ஊரடங்கு ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிட்டதாகவும் மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடரந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். நாடு முழுவதும் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை கையாள்வதற்கான முறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் மூன்று கேள்விகளையும் மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளார்.
1. ஆம்போடெரிசின் பி மருந்து பற்றாக்குறைக்கு எடுக்கப்படும் நடவடிக்கை என்ன?
2. நோயாளி ஒருவர் இந்த மருந்தைப்பெறுவதற்கான நடைமுறை என்ன? அவர் எப்படி பெறுவது?
3. சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக, வழிமுறைகள் என்ற பெயரில் மக்கள் ஏன் தொந்தரவு செய்யப்படுகிறார்கள்?
இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் கூற கோரியுள்ளார்.
Black fungus महामारी के बारे में केंद्र सरकार स्पष्ट करे-
— Rahul Gandhi (@RahulGandhi) June 1, 2021
1. Amphotericin B दवाई की कमी के लिए क्या किया जा रहा है?
2. मरीज़ को ये दवा दिलाने की क्या प्रक्रिया है?
3. इलाज देने की बजाय मोदी सरकार जनता को औपचारिकताओं में क्यों फँसा रही है?
Related Tags :
Next Story