கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு


கேரளாவில் இன்று கொரோனா பாதிப்பு  எண்ணிக்கை  அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Jun 2021 2:21 PM GMT (Updated: 1 Jun 2021 4:58 PM GMT)

கேரளாவில் தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் நேற்று 12,300- பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கேரள சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, “ கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,760- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 24,711- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 02 ஆயிரத்து 426- ஆக உள்ளது.  

கேரளாவில்  தொற்று பாதிப்பில் இருந்து  இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்து 34 ஆயிரத்து 502- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 194- பேர்  உயிரிழந்துள்ளனர். 

இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9,009- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய இன்று ஒருநாளில் மட்டும் 1.30 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 15.5 சதவிகிதமாக உள்ளது. 

Next Story