மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கையிறு மூலம் பத்திரமாக மீட்பு


மத்திய பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் கையிறு மூலம் பத்திரமாக மீட்பு
x
தினத்தந்தி 11 Jun 2021 2:27 PM GMT (Updated: 11 Jun 2021 2:27 PM GMT)

மத்திய பிரதேசத்தில் ஆற்றின் மறுபுறம் சிக்கிய தொழிலாளர்கள் கயிறு கட்டி மீட்கப்பட்டனர்.


போபால்,

மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் பகுதியில் ஓடும் ஆற்றில் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அதன் மறுபுறத்தில் 4 சிறுவர்கள், சில தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். 

அங்கு சென்ற பேரிடர் மீட்புக் குழுவினர், மேலும் கீழுமாக இரு கயிறுகளை கட்டினர். இதனையடுத்து மேல்பகுதியில் கட்டப்பட்டிருந்த கயிறினைப் பிடித்தபடி கீழே கட்டப்பட்டிருந்த கயிற்றில் நடந்து கரைக்கு வந்து சேர்ந்தனர்.

Next Story