தெலுங்கானா முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி பாஜகவில் இணைந்தார்
தெலுங்கானா முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி எட்டலா ராஜேந்தர் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
ஐதராபாத்,
தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த எட்டலா ராஜேந்தர் மீதான நில அபகரிப்பு புகாரை விசாரிக்க முதல்வர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் கடந்த மாதம் விடுவிக்கப்பட்டடார்.
இதையடுத்து சில தினங்களுக்கு முன்னதாக அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். மேலும் கட்சியிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து இன்று அவர் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அவரை கட்சிக்கு வரவேற்ற அமைச்சர் தர்மேந்திர பிரதான், அடுத்த பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்று தெலுங்கானாவில் ஆட்சி அமைக்கும் என்றார். .
Related Tags :
Next Story