சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை
சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,
7 வது சர்வதேச யோகா தினம் நாளை உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் நடக்கும் நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.
இதுகுறித்து, ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
டெல்லியில் நடக்கவுள்ள சர்வதேச யோகா தின கொண்டாட்டம், காலை 6:30 மணி முதல் துார்தர்ஷன் 'டிவி' சேனல்களில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்ற உள்ளார். இதில், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் இணை மந்திரி கிரண் ரிஜிஜுவும் உரை நிகழ்த்த உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story